Saturday, November 22, 2014

விகட சக்கர விநாயகர் 




தட்சயாகத்தின் பொது வீரபத்திரர் மீது திருமால் சக்கரத்தை 
ஏவினார். வீரபத்திரர்  அணிந்திருந்த  கபால மாலையில் 
இருந்த கபாலம் அதை விழுங்கி விட்டது, சக்ராயுதத்தை 
மீட்டு வரும்படி, விஷ்வக்சேனரை திருமால் அனுப்பி 
வைத்தார்.

முனிவர் ஒருவரின் அறிவுரைப்படி விஷ்வக்சேனர், பூலோகத்தில் 
காஞ்சியில் சிவனை வழிபட்டு வீரபத்திரரின் காட்சி பெற்றார். 
ஆனால் அவர் சக்ராயுதத்தை கபாலத்திடமே கேட்டுப் பெறும்படி 
கூறினார். 

இந்நிலையில் விஷ்வக்சேனர்  தன் கை, கால்களை கோணலாக்கி 
தள்ளாடி நடந்தார், அதைக்கண்டு அனைவரும் சிரிக்க, கபாலமும் 
சிரித்தது. அப்போது வாயிலிருந்து சக்ராயுதம் நழுவி விழுந்தது.

விஷ்வக்சேனர் அதை எடுக்கும் முன் விநாயகர் எடுத்துக் கொண்டு 
தனக்காகவும் ஒருமுறை விகடக் கூத்தாடினால் சக்ராயுதத்தை 
தருவதாக கூற , அதன் படி கூத்தாடி , சக்ராயுதத்தை பெற்றார் 
விஷ்வக்சேனர்.

இவ்வாறு சக்ராயுதத்தை வழங்கிய விநாயகர் விகட சக்ர விநாயகர் 
என்ற பெயருடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அருள் 
பாலிக்கிறார். 


விகடம் ரசித்த விநாயகரை , நாமும் தரிசிப்போம் 

No comments:

Post a Comment