Friday, November 21, 2014

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்


துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். 

துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். 

சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் 
வைகாசி தாதா - ருரு பைரவர் 
ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் 
ஆடி அரியமான் -கபால பைரவர் 
ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் - வடுக பைரவர் 
ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர் 
கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர் 
மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர் 
தை விஷ்ணு - குரோதன பைரவர் 
மாசி வருணன் - ஸம்ஹார பைரவர் 
பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.

No comments:

Post a Comment