Saturday, November 22, 2014

ஆலமரத்தடியில் சுந்தர விநாயகர்




ஆலமரத்தடியில் சுந்தர விநாயகர்




சுமார் நூறாண்டுகளாக ஆலமரத்தடியில் அருளும் சுந்தரவிநாயகரை பிரதமர் நேரு, மதுரை வந்தபோது வழிபட்டுச் சென்றார். அன்றிலிருந்து இவரை ஆலாலய நேரு சுந்தரவிநாயகர் என்றே அழைக்கின்றனர். பாசம், அங்குசம், அபயம், வரதத்துடன் இவருக்கு 4 கரங்கள். மூலவரான விநாயகருக்கு மாதந்தோறும் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் 21 கனி மற்றும் பலகார வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.

சுந்தரவிநாயருக்கு மஞ்சளை மாலையாகக் கட்டி தொடர்ந்து ஐந்து வாரங்கள் அணிவித்தால் தடை நீங்கி திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் கோயில் கொண்டு இவர் அருள் புரிகிறார்.


ஆலமரத்தடி நாயகனை வணகினால் ஆலாய் தழைத்திடும் வம்சம் 

No comments:

Post a Comment