Saturday, November 22, 2014

மரகத விநாயகர்



நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது கோட்டாறு. இங்கே தேசிக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. மூலவரை மரகத விநாயகர் என்று அழைக்கின்றனர்.

17ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். கருவறையின் மேற்கூரை மரத்தால் ஆனது. கருவறை பீடத்தில் விநாயகர் உள்ளார். கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கி உள்ள அறையில் சிவனும், பிரியாவிடை நாயகியும் உள்ளனர். விடலைப் பிள்ளையார், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, பூதத்தான், கன்னி விநாயகர், நடராஜர், சிவகாமி அம்பாள், பத்மநாப சுவாமி, நாகராஜா, மயிலேறும் பெருமாள், விசாலாட்சி ஆகிய பரிவார தெய்வங்களும் அருள்புரிகிறார்கள்.

No comments:

Post a Comment