Saturday, November 22, 2014

லிங்க வடிவ பிள்ளையார் - தீவனூர்





விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ளது நெற்குத்தி விநாயகர்
கோயில். ஆடு மேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது
யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது அது விநாயகரின்
உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை
செய்து வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகர் லிங்க வடிவில்
இருக்கிறார் பால் அபிஷேகம் செய்யும் பொது லிங்கத்தில்
படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம்.


இவர் பொய்யாமொழி விநாயகர் எனவும் அழைக்கப் படுகிறார்
விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஓன்று இணைந்தபடி,
மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை
'பிரம்மா', 'விஷ்ணு', 'சிவன்', என கூறுகின்றனர்.


திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள்
இந்த மரங்களை சுற்றி வருகின்றனர், இவற்றிக்கு தினமும்
பூஜை செய்யபடுகிறது


திறந்திருக்கும் நேரம் காலை 6 முதல் மாலை 7 வரை


இருப்பிடம். திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் 13 கி.மீ தொலைவில் தீவனூர்


தகவல் தொடர்பிற்கு : 94427 0813


"நெற்குத்தி கல்லாயிருந்து , நெஞ்சில் நிலைத்த விநாயகர்"

No comments:

Post a Comment