Wednesday, October 29, 2014

அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்

அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
நட்சத்திர தீபம் என்பது தீபாவளி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமைத் தினத்தில் இருந்து பவுர்ணமி வரை, அதாவது உத்தான தவாதசிக்குப் பிறகு வரும் பவுர்ணமி வரை தினமும் ஏற்ற வேண்டிய தீபம் ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டிற்குள் ஏற்றுவது கூடாது. 

வீட்டிற்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும். வெளியில் துளசி பிருந்தாவனம் இருந்தால் பிருந்தாவனத்திற்கு முன்பு ஏற்றலாம். அல்லது திறந்த வெளி முற்றம் அல்லது திண்ணையில் ஏற்றலாம். 

வெளி முற்றம், திண்ணை அல்லது துளசி பிருந்தாவனத்தின் முன்பு போன்ற இடங்கள் எதுவும் சரியாக அமையவில்லை என்றால், நாம் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு தட்டிலோ அல்லது பலகையிலோ தீபங்கள் ஏற்றி வெளியில் வைக்கலாம். மாடியிலும் ஏற்றலாம். 

விளக்குகள் ஏற்றும் இடத்தை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து செம்மண் கோலம் இட்டு அதன் மேல்தான் ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்குகளே போதும். பித்தளை, வெண்கலம் போன்ற விளக்குகளில்தான் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

ஆனால் எவர்சில்வர் விளக்கு கூடாது. இந்த தீபங்கள் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். அதாவது வெளிச்சம் வந்து நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். ஆகையால் அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்ற வேண்டும். 

இந்த நட்சத்திர தீபம் என்று கூறப்படும் தீபம் தினமும் 27 ஏற்ற வேண்டும். தீபம் முடியும் பவுர்ணமி அன்றோ அல்லது சாத்யப் பட்ட சந்தர்பத்திலோ தீபதானம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment