Friday, October 24, 2014

சுயம்பு விநாயகர் - கணபதி புலே

சுகம் தரும் சுயம்பு விநாயகர்  கணபதி புலே
வக்ரதுண்ட விநாயகர் - சென்னை
மகோதர் விநாயகர்       - ராமேஸ்வரம்
எகதந்த விநாயகர்          - கேரளா
கஜானன் விநாயகர்       - தஞ்சாவூர்
விக்கத் விநாயகர்           - காஷ்மீர்
விக்னராஜ் விநாயகர்    - இமாலயம்
தூம் வம விநாயகர்        -  தீபெத்
லம்போதர விநாயகர்    - மகாராஷ்டிரா
இவர்கள் பாரத நாட்டன் அஷ்ட விநாயகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்

அஷ்ட வினாயகர்களின் தலைவர்

இந்த அஷ்ட விநாயகரை  பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம்,
படித்திருப்போம், பார்த்தும் இருப்போம்.  ஆனால் இவர்களை விடவும்
மகவும் பெருமை மிகுந்தவர், மும்பையில் இருந்து 350 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள ரத்தினகிரி என்ற மாநகரில் கணபதி புலே என்ற இடத்தில்
சுயம்பு விநாயகராக  வீற்றிருக்கிறார். கணபதி புலே என்ற திருநாமத்துடன்
தான் இந்த விநாயக அழைக்கப் படுகிறார். இவரே அஷ்ட வினாயகர்களுக்கு
எல்லாம் தலைவர் என்றும்  கூறப்படுகிறது.



சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு, மொகலாயர் ஆட்சி காலத்தில் கொங்கன்
மலையடிவாரத்தில் தாழம்பூ செடிகள் சூழ்ந்த காட்டில் மன்னன் அடியில்
இருந்து, கனபதிபுலே விநாயகர் சுயம்புவாக தோன்றினார். இவ்விடத்தில்
அந்த காலத்தில் பால்பாத் பிடே  என்ற பிரமணர் ஒருவர் வசித்து வந்தார்
இவருக்கு மொகலாய ஆட்சியில் துன்பங்கள் ஏற்ப்பட்டன.

அசரீரியாக தோன்றினர்

இருப்பினும் திடமான மனத்துடன்  சில காலம்  உண்ணாமல், தாழம்பூ காட்டில் அமர்ந்து மங்கள மூர்த்தியான விநாயகரை நோக்கி வழிபட்டு தவமிருந்து வந்தார் . அங்கு அசரீரியாக தோன்றிய விநாயகப்பெருமான். இங்கே நான்
ரூபமற்றவனாக இருக்கறேன். என்னுடைய பக்தர்களின் கோரிக்கையை நிறைவேர்ற்ற உள்ளேன் . எனவே என்னை நினைத்து பூஜித்து வா உன்னுடைய கஷ்டங்களை போக்கி அதிலிருந்து விடுவிக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் ஒரு சமயம், பால்பத் பிடே வளர்த்து வந்த பசு ஓன்று
பால் காராமல் இருந்தது. அதற்க்கு சிகிச்சை அளித்தும் அந்த பசு பால்
கறக்க வில்லை. குறிப்பிட்ட அந்த பசு மட்டும் பால் காரைக்காமல் இருப்பதற்கான காரணம் தெரியாமல் மாடு மேய்ப்பவன் திணறினான்
ஒருநாள் மாடு மேய்ப்பவன், பசுவின் நடாடிக்கையை கவனிக்க குறிப்பிட்ட
அந்த பசுவை பின்தொடர்ந்தான்.

பால் கரந்த பசு

அப்போது  பசு ஒரு இடத்தில் தன்  மடியில் இருந்து பாலை தானாகவே
சுரந்தது, ஆச்சரியம் அடைந்த மேய்ப்பன் இதை பால்பத் பிடே விடம்
தெரிவித்தான். உடனே அவர் அந்த இடம் சென்று அந்த இடத்தை சுத்தம்
செய்து பார்த்தார் அப்போது அங்கே கணபதி சுயம்புவாக தோன்றினர்.
இதைக்கண்டு மெய் சிலிர்த்த பால்பத் பிடே உடனடியாக அங்கு ஒரு
கோவிலை எழுப்பினார், கணபதி புலே என்ற நாமத்துடன் விநாயகரை
வழிபட தொடங்கினார்.

'கணா' என்றால் காப்பவன், 'புலே' என்றால் குகை. மலைக் குன்றுபோல்
அமர்ந்து இந்த பிரபன்ஜத்தை காப்பவன் என்பதால் 'கணபதி புலே' என்ற
பெயர் பெற்றது. பழமை வாய்ந்த இந்த கோவில் கணபதி சிலை,
மலையடிவாரத்தில் தான் தோன்றியாக வந்தது. சுயம்பு சிலையை சுற்றிலும்
பூக்கள் நிறைந்த செடிகள் சூழ்ந்திருக்கின்றன

ஜொலிக்கும் கோவில்

இந்த  கணபதிக்கு, விஷேச நாட்களில் மகா பிரசாதம் தயார் செய்வதற்காக
ஒரு பெரிய சமையல் அரை உள்ளது. விழா நாட்களில் கோவிலின் முன் வாயிலில் 17 தீபத் தூண்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெக  ஜோதியாய்
ஜொலிக்கும். தசரா தீபாவளி, கார்த்திகை, குடிபடவா சங்கஷ்டி போன்ற
விழா காலங்களில் மகா பிரசாதம் வழங்கப்படும் .


அப்போது  பசு ஒரு இடத்தில் தன மடியில் இருந்து பாலை தானாகவே
சுரந்தது, ஆச்சரியம் அடைந்த மேய்ப்பன் இதை பால்பத் பிடே விடம்
தெரிவித்தான்.


No comments:

Post a Comment