Friday, October 24, 2014

மந்திரத் திருப்புகழ்


மந்திரத் திருப்புகழ்


திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’

எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’

எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று

கூறப்படுகிறது


மந்திரத் திருப்புகழ் பாடல்


இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!


மந்திரத் திருப்புகழின் பொருள்


"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு,

விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை,

எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும்

இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும்

என்னை வாட்டாத வகையில் முருகா, உனது

திருவடிகளைதந்துஅருள வேண்டும்.

கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் 

அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும்

வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே!

மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின்

மகளான தெய்வயானை மணவாளனே!

திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"



No comments:

Post a Comment