Friday, October 24, 2014

வன்னி மரத்தடியில்

 வன்னி மரத்தடியில் ஆனைமுகன்

                                            


திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலும், சாத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு வரும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது வன்னி விநாயகர் கோவில். வன்னி மரத்தடியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சித்தர்களும், சான்றோர்களும் வழிபட்ட பழைமை வாய்ந்தது இக்கோயில். 

இங்கே கருவறையில் வன்னி விநாயகப் பெருமானும், வன்னி மரமும் சேர்ந்து அமையப் பெற்றிருப்பது சிறப்பு. கருவறை மண்டபம் மேல் வன்னி மரம் பசுமையாக, கோபுரம் போன்று காட்சியளிக்கிறது. அதனால், கருவறை மண்டபத்தின் மேல் கோபுரம் கட்டப்படவில்லை.

எண்ணியவை திண்ணியமாக  அருள் தரும் 
வன்னி வினாயகரை  வழிபடுவோம் 

No comments:

Post a Comment