Thursday, September 25, 2014

தில்லையில் ஐந்து சபைகள் 



சித்சபை 

சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை.இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம்.பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம்,சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.

கனகசபை

சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.

தேவசபை

பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

நிருத்தசபை

தேர் அம்பலம்,நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.

ராஜசபை

ஆயிரங்கால் மண்டபம். மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.

No comments:

Post a Comment