Tuesday, September 23, 2014

திருமணத் தடை விலக ரோஜாப்பூ மாலை




திருச்சி அருகே உள்ள கருமண்டபத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை இளங்காட்டு மாரியம்மன். கருவறையில் இளங்காட்டு மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் அமைதி தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். 

அன்னை தன் மூன்று கரங்களில் உடுக்கை, கத்தி, கிண்ணம் ஆகியவைகளை ஏந்தியுள்ளாள். நான்காவது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள். 


வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும். திருமணத் தடை விலக, குழந்தைப் பேறு கிடைக்க, வேலைவாய்ப்பு கிடைக்க என நிறைய பேர், இதுபோன்ற பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர். 

தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆலயம் வரும் பக்தர்கள், அன்னைக்கு புடவை வாங்கி அணிவித்து மகிழ்கின்றனர். இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று, ராகு கால நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.


No comments:

Post a Comment